2011-12-20 15:29:06

மெக்சிகோ அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படும் மாற்றம் சமயக் கட்டுப்பாட்டை அகற்ற உதவும் - ஊடகங்கள் கருத்து


டிச.20,2011. மெக்சிகோவில், அரசிடம் முதலில் அனுமதியைப் பெறுவதற்கு முயற்சிக்காமலே, பொதுவில் சமய வழிபாடுகளை நடத்துவதற்கு அந்நாட்டின் சமயக் குழுக்களுக்கு அனுமதி வழங்கும் வகையிலான அரசியல் அமைப்பின் மாற்றத்திற்கு அந்நாட்டின் கீழ்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மெக்சிகோவின் அரசியலில் பலரால் தக்க வைக்கப்பட்டிருந்த குருக்களுக்கு எதிரான உணர்வுகளைக் களைவதற்கு, அரசியல் அமைப்பின் இந்த மாற்றம் உதவும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
மெக்சிகோ அரசியல் அமைப்பின் எண் 24ல் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள மாற்றங்கள், ஆலயங்களுக்கு வெளியே பொதுவில் வழிபாடுகளை நடத்துவதற்கு அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை நீக்கியுள்ளன.
இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த மெக்சிகோ ஆயர் பேரவை, இதன்மூலம், தனிப்பட்டவரின் சமய சுதந்திரம் மதிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
மெக்சிகோவில் 1929ம் ஆண்டு முதல் Cristero புரட்சி முடிவடைந்த 71 ஆண்டுகள் வரை, புரட்சியாளர் கட்சி ஆட்சி செய்து வந்தது. Cristero புரட்சியானது, குருக்களுக்கு எதிராக இடம் பெற்ற புரட்சியாகும்.








All the contents on this site are copyrighted ©.