சிரியாவின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள்
டிச.17,2011. சிரியாவில் இடம் பெறும் அரசியல் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படுமாறு
அந்நாட்டின் கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிரியாவின் பிரச்சனைக்குத்
தீர்வு காணுமாறு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை இரஷ்யா வலியுறுத்தி வரும்வேளை, சிரிய ஆர்த்தடாக்ஸ்,
கிரேக்க ஆர்த்தாடாக்ஸ் மற்றும் சிரியாவின் மெல்க்கிதே கிரேக்கரீதி கத்தோலிக்க சபைகளின்
முதுபெரும் தலைவர்கள், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, சிரியாவின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் ஐ.நா.பாதுகாப்பு
அவையில் இரஷ்யா முன்வைத்த புதிய பரிந்துரையை சிரிய நாட்டு ஊடகங்கள் புறக்கணி்ததுள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது