2011-12-16 15:32:41

மூன்றாம் உலகின் பொருளாதாரம் குடியேற்றதாரத் தொழிலாளரால் வளர்ந்துள்ளது : PIME ஆய்வு


டிச.16,2011. வளர்ந்த நாடுகளில் வேலை செய்யும் குடியேற்றதாரர்களால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் முன்னேறியிருப்பதாக PIME என்ற பாப்பிறை மறைபோதக நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
குடியேற்றதாரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வரும் பணம், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 8 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
மேற்குலகில் வாழும் குடியேற்றதாரர்கள் தெற்குலகிற்கு 25,100 கோடி டாலரை அனுப்பியிருப்பதாகவும், இத்தொகை இவ்வாண்டு முடிவதற்குள் 40,600 கோடி டாலராக உயரும் என்றும் PIME நடத்திய ஆய்வு கூறுகிறது.
வெளிநாடுகளில் குடியேறியுள்ள தங்களது குடிமக்களால் பணம் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தையும், (58 பில்லியன் டாலர்) அதற்கடுத்து சீனா (57பில்லியன் டாலர்), மெக்சிகோ(24 பில்லியன் டாலர்) என நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாலியிலிருந்து வெளியேறும் பணத்திற்கு வரி விதிப்பது குறித்து இத்தாலிய நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.