இலங்கை பிறரன்புச் சபை சகோதரிகளின் பாதுகாப்பிற்கான செப நாள்
டிச.12,2011. இதற்கிடையே, இலங்கையின் அன்னை தெரேசாவின் பிறரன்புச் சபை சகோதரிகள் மற்றும்
அவர்களின் பிரேம் நிவாஸ் இல்லத்தின் பாதுகாப்பிற்குச் செபிக்கும் நாளாக இச்செவ்வாய்க்
கிழமையைச் சிறப்பிக்கின்றது கொழும்பு உயர்மறைமாவட்டம். கடந்த நவம்பர் 28ம் தேதி பிறரன்புச்
சபை சகோதரிகள் நடத்திய இல்லத்திற்குள் புகுந்து சோதனை நடத்தியதுடன், அருட்சகோதரி மேரி
எலிசாவையும் கைதுச் செய்த காவல்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து கர்தினால் மால்கம்
இரஞ்சித், பத்திரிகையாளர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இம்மாதம் 8ம் தேதி மன்னிப்புக்
கடிதம் ஒன்றை இச்சபை சகோதரிகளுக்கு அனுப்பியது இலங்கை அரசு. மன்னிப்பு கடிதம் மட்டும்
போதாது, அச்சபை சகோதரிகளுக்கு எதிரான அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும்
என விண்ணப்பம் ஒன்றை முன்வைத்துள்ளது தலத்திருச்சபை.