2011-12-12 15:02:06

ஆப்ரிக்காவில் குழந்தைகளின் நிலை குறித்து UNICEF கவலை


டிச.12,2011. வரும் ஆண்டில் ஆப்ரிக்காவின் Sahel பகுதியில் பத்து இலட்சம் குழந்தைகள் வரை உணவு நெருக்கடியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக UNICEF எனும் குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.
இத்தகைய நிலைகளுக்குத் தீர்வு காண அனைத்துலகச் சமுதாயம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விண்ணப்பித்துள்ள இந்த அமைப்பு, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு Niger என தெரிவிக்கிறது. நைஜீரியா, கேமரூன், செனகல் ஆகியவைகளின் வடபகுதிகள், சாடு, புர்க்கீனா ஃபாசோ, மாலி மௌரித்தானியா ஆகிய நாடுகளில் குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையால் துன்புறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.