இலங்கையில் இந்தியத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்–
உரிமைகள் அமைப்பு
டிச.10,2011. இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்கள் இன்னும் குடியுரிமைகள் இன்றியும்
உணவு வேலை குடியிருப்பு நிலம் போன்ற அடிப்படை உரிமைகளின்றியும் உள்ளனர் என்று கொழும்புவில்
நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டது. இலங்கையில் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இந்தியத்
தமிழருக்கு அரசு செய்து வருவது என்ன என்பது குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் பொருளாதார,
சமூக மற்றஉம் கலாச்சார உரிமைகளுக்கான அமைப்பு ஒன்று இவ்வாறு கூறியது. அக்காலத்திய
சிலோனில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து
இலங்கை வந்தவர்களே இந்தியத் தமிழர்கள் ஆவர். இவர்கள் தேயிலைத் தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு
மேலாக கட்டப்பட்ட சிறிய குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.