2011-12-09 15:13:37

உறுதியான குடும்பங்களைக் கட்டி எழுப்புமாறு பராகுவே சட்ட அமைப்பாளர்களுக்குத் தலத்திருச்சபை அழைப்பு


டிச.09,2011. தென் அமெரிக்க நாடான பராகுவேயில் வறுமையை ஒழிப்பதன் ஒரு திட்டமாக, உறுதியான குடும்பங்களைக் கட்டி எழுப்புமாறு அந்நாட்டு ஆயர் ஒருவர் சட்ட அமைப்பாளர்களைக் கேட்டுள்ளார்.
மனித சமுதாயம் மற்றும் பராகுவே நாட்டின் எதிர்காலம் குடும்பங்களின் மீதும் குடும்பங்களிலிருந்தும் உருவாக்கப்பட்டால் சமுதாயத்தின் அடிப்படையான அமைப்பான குடும்பங்கள் உறுதிப்படும் என்று சான் பேத்ரோ ஆயர் Adalberto Martinez கூறியுள்ளார்.
குடும்பங்களையும் மனித வாழ்வையும் தாக்கும் விதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் குறித்து எச்சரித்த ஆயர் Martinez, சட்ட அமைப்பாளர்கள் கிறிஸ்தவ மதிப்பீடுகளை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.