டிச.08,2011. இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் “மனித உரிமைகள்
ஒரு தகவல் கையேடு” என்ற ஒலி-ஒளி குறுந்தகட்டையும் 83 பக்கங்கள் கொண்ட ஒரு கையேட்டையும்
அண்மையில் வெளியிட்டது. டிசம்பர் 9, இவ்வெள்ளிக்கிழமை, அனைத்துலக ஊழல் ஒழிப்பு தினம்.
டிசம்பர் 10 இச்சனிக்கிழமை அனைத்துலக மனித உரிமைகள் தினம். எனவே இத்தினத்தையொட்டி இந்திய
ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ள மனித உரிமைகள் தகவல்
கையேடு பற்றி அறிவதற்காக அந்த ஆணையத்தின் செயலர் அருட்பணி சார்லஸ் இருதயம் அவர்களைத்
தொலைபேசியில் அழைத்தோம்.