2011-12-07 16:02:30

ஒரே மொழியை அனைவரும் பேசாமலிருப்பது, இலங்கை மக்களிடையே ஒப்புரவை வளர்ப்பதற்கு தடையாக உள்ளது


டிச.07,2011. ஒரே மொழியை அனைவரும் பேசாமலிருப்பது, இலங்கை மக்களிடையே ஒப்புரவை வளர்ப்பதற்கு ஒரு பெரும் தடையாக உள்ளதென்று Episcopal சபையின் ஆயர் ஒருவர் கூறினார்.
கொழும்புவில் இலங்கைக் காரித்தாஸ் அமைப்பு அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய Episcopal ஆயர் Cletus Chandrasiri Perera இலங்கை மக்கள் ஒப்புரவை மேற்கொள்ள சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளில் மொழி ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது என்று எடுத்துரைத்தார். ஆயர் வெளியிட்ட இதே பிரச்னையை இந்து மதத்தலைவரான Siva Sri Ramachandran Babu Sharmaவும் ஆதரித்துப் பேசினார்.
சிங்களம், தமிழ் இரண்டும் இலங்கையின் அரசு மொழிகளாக இருந்தாலும், இவ்விரு குழுவினருக்கும் இடையே இவ்விரு மொழிகளையும் கற்றுக் கொள்ள பெரும் தயக்கங்கள் இருந்து வந்ததென்றும், இலங்கையில் பல்லாண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் இந்தப் பிளவை இன்னும் விரிவுபடுத்தியுள்ளதென்றும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மதத்தலைவர்கள், இரு மொழிகளைச் சார்ந்தவர்களும் தங்கள் எண்ணங்களை மாற்றி, பழைய வரலாற்றுக் காயங்களை மறந்து, புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற அழைப்பையும் முன் வைத்தனர்.








All the contents on this site are copyrighted ©.