உலகின் மிக உயர்ந்த கிறிஸ்மஸ் மரத்தின் மின் விளக்குகளைக் கணனியின் உதவி கொண்டு திருத்தந்தை
ஏற்றிவைத்தார்
டிச.07,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலகின் மிக உயர்ந்த கிறிஸ்மஸ் மரத்தின் மின்
விளக்குகளை Tablet computer என்று அழைக்கப்படும் கையடக்கமான கணனியின் உதவி கொண்டு இப்புதன்
மாலை ஏற்றிவைத்தார். இத்தாலியின் Gubbio எனுமிடத்தில் உள்ள Ingino எனப்படும் ஒரு மலைச்
சரிவில் மின் விளக்குகளின் உதவியுடன் 750 மீட்டர்கள் உயரமுள்ளதாய் வடிவமைக்கப்பட்டுள்ள
இந்த கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகளை வத்திக்கானில் உள்ள தன் இல்லத்தில் இருந்தபடியே திருத்தந்தை
ஒளியேற்றி வைத்தார். திருத்தந்தை ஒளியேற்றி வைத்ததை Gubbioவில் உள்ளவர்களும் மற்றும்
பிற நாடுகளில் உள்ளவர்களும் காணும்படி வத்திக்கான் தொலைகாட்சி நிலையம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஒவ்வோர்
ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி Gubbioவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண இத்தாலியின்
கலாச்சார, அரசியல் மற்றும் கேளிக்கை உலகின் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.