2011-12-06 15:29:23

ஹைதராபாத் நகரில் மனித உரிமைகளை மையப்படுத்தி நடைபெற்றுவரும் நிகழ்வுகள்


டிச.06,2011. MSI எனப்படும் Montfort சமுதாய மையமும், புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியும் இணைந்து ஹைதராபாத் நகரில் டிசம்பர் 1 முதல் 14 வரை மனித உரிமைகளை மையப்படுத்திய பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.
ஹைதராபாத், செக்கந்தராபாத் நகரங்களில் உள்ள 16 பள்ளிகளின் மாணவ, மாணவியர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மனித உரிமைகளை மையப்படுத்தி, ஆவணப் படங்கள் எடுத்தல், புகைப் படம் எடுத்தல், ஓவியம் தீட்டுதல், கவிதை எழுதுதல் ஆகிய பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இளையோர் மனதில் மனித உரிமைகளைக் குறித்து நல்ல எண்ணங்களை விதைப்பதே இந்த இருவார நிகழ்வுகளின் முக்கிய கருத்து என்று MSI இயக்குனர் அருள்சகோதரர் Varghese Theckanath கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி அகில உலக மனித உரிமைகள் நாள் கொண்டாடப்படுவதையொட்டி, இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.