சிரியாவில் வன்முறைகளால் மக்கள் பெருமளவில் உயிரிழந்து வருவது குறித்து திருப்பீடம் கவலை
டிச.03,2011. அமைதி மற்றும் நிலையான தன்மையின் வருங்காலம் குறித்த நியாயமான ஏக்கங்கங்களை
ஏற்பதிலும் பொதுநலனுக்கானத் தேடலிலும் அதிகாரிகளும் பொதுமக்களும் அனைத்து முயற்சிகளையும்
கைக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பேராயர் சில்வானோ தொமாசி. ஜெனீவாவிலுள்ள
ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தப்பார்வையாளர் பேராயர் தொமாசி, சிரியா
குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அவைக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். சிரியாவில்
இடம்பெறும் வன்முறைகளால் மக்கள் பெருமளவில் உயிரிழந்து வருவது மற்றும் மக்களின் துன்பங்கள்
அதிகரித்து வருவது குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் பேராயர். பொருளாதர
மேம்பாடு, நீதி, விடுதலை போன்றவைகளுக்கான சிரிய மக்களின் போராட்டங்கள், சகிப்பற்ற தன்மைகள்,
பாகுபாடு, வன்முறை போன்றவைகள் மூலம் அல்ல மாறாக, உண்மைக்கான முழு மதிப்புடன் இடம்பெற
வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார் பேராயர் தொமாசி.