2011-11-29 14:08:32

காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடம் வகிக்கிறது


நவ.29,2011. காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் தீர்க்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் நிலை வகிப்பதாக Amnesty International என்ற சர்வதேச மன்னிப்பு அமைப்பின் இலங்கைக்கான நிபுணர் Yolanda Foster தெரிவித்துள்ளார்.
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும், இதனால் பல குடும்பங்கள் தொடர்ந்து பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் சர்வதேச மன்னிப்பு அமைப்பின் நிபுணர் தெரிவித்தார்.
சித்திரவதை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக, அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது Foster இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற சர்வதேச நியதிக்கு மதிப்பளிக்க வேண்டுமாயின், சுதந்திர விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை விவகாரங்களை ஏனைய நாடுகள் தவறான முன்னுதாரணமாகக் கொள்ளாமல் இருப்பதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என Foster மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.