2011-11-25 15:12:54

மியான்மார் இராணுவ அரசு மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகள் குறித்து பேராயர் வெளியிட்ட நம்பிக்கை


நவ.25,2011. நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கு மதத் தலைவர்களை அரசு அழைத்திருப்பதும், அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கியிருப்பதும் நாடு நல்லதொரு திசையை நோக்கி செல்கிறது என்பதைக் காட்டும் நம்பிக்கை அடையாளங்கள் என்று மியான்மாரின் ஆயர் ஒருவர் கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiயைத் தேர்தலில் போட்டியிட அழைத்திருப்பது, அடுத்த ASEAN கூட்டம் மியான்மாரில் நடக்க விருப்பதாக அறிவித்திருப்பது ஆகிய செயல்பாடுகளைக் காணும்போது மனதில் நம்பிக்கை பிறந்துள்ளது என்று Yangon பேராயர் Charles Maung Bo கூறினார்.
உலகின் பிற நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தும் வகையில் மியான்மார் இராணுவ அரசு மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சிகள் குறித்து தன் நம்பிக்கையை வெளியிட்ட பேராயர் Maung Bo, இந்த நாட்டில் முன்னேற்றம் தொடர்ந்து வளர அனைத்து மதத் தலைவர்களின் ஒத்துழைப்பையும் அரசு பெறவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
பல ஆண்டுகளாக அரசின் அடக்கு முறைகளால் மனம் தளர்ந்திருந்த கிறிஸ்தவ சமுதாயம் இனி நாட்டின் முன்னேற்றத்திற்காக முழு மூச்சுடன் உழைக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் மியான்மார் ஆயர் பேரவையின் செயலரான பேராயர் Charles Maung Bo.








All the contents on this site are copyrighted ©.