2011-11-24 14:40:59

உரோம் நகரில் உள்ள Rebibbia சிறைச்சாலையில் உள்ளவர்களைத் திருத்தந்தை சந்திக்கச் செல்கிறார்


நவ.24,2011. வருகிற டிசம்பர் 18ம் தேதி, திருவருகைக்கால நான்காம் ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோம் நகரில் உள்ள Rebibbia என்ற சிறைச்சாலையில் உள்ளவர்களைச் சந்திக்கச் செல்கிறார்.
திருத்தந்தையின் இந்த சந்திப்பைக் குறித்து இப்புதனன்று செய்தி வெளியிட்ட பாப்பிறை இல்லத்தின் மேற்பார்வையாளர், திருத்தந்தை டிசம்பர் 18ம் தேதி காலை 10 மணியிலிருந்து 11.30 மணி வரை இச்சிறையில் உள்ளவர்களோடு நேரம் செலவழிப்பார் என்று தெரிவித்தார்.
Rebibbia சிறைச்சாலையின் நடுவில் அமைந்துள்ள விண்ணகத் தந்தை ஆலயத்தில் சிறைச்சாலைக் கைதிகளைச் சந்தித்து திருத்தந்தை உரையாடுவார் என்றும் 11.30 மணியளவில் சிறைச்சாலையின் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை திருத்தந்தை தனது நினைவாக நட்டு வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.