2011-11-23 15:18:19

அகமதாபாத் நகரில் உணவு உரிமைகளைக் கோரும் விழிப்புணர்வு கூட்டம்


நவ.23,2011. ‘Anna Suraksha Adhikar Jhumbesh’ என்று அழைக்கப்படும் உணவு உரிமைகளைக் கோரும் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்றது.
இயேசு சபையினரின் சமுதாயப் பணிகள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில், குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 400 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு கிடைக்கும் திட்டம், மதிய உணவு திட்டம், குழந்தைகளின் முழு வளர்ச்சித் திட்டம், தாய் சேய் நலத் திட்டம் என்ற பல்வேறு திட்டங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
குஜராத் மாநிலத்தில் எந்த ஒரு மனிதரும் இரவு பசியோடு தூங்கப்போகக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று இக்கூட்டத்தின் இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்தனர் என்று இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த இயேசு சபை குரு செட்ரிக் பிரகாஷ் கத்தோலிக்க ஆயர்கள் அவையின் வலைதளத்திற்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.