2011-11-23 15:17:44

Aung San Suu Kyiயால் நாடு முன்னேற்றம் அடையும் - மியான்மார் பேராயர் நம்பிக்கை


நவ.23,2011. மியான்மார் எதிர்கட்சித் தலைவரான Aung San Suu Kyi நாட்டுப் பற்று மிக்கவர் என்றும், அவரால் மியான்மார் நாடு முன்னேற்றம் அடையும் என்று தான் நம்புவதாகவும் மியான்மார் பேராயர் ஒருவர் கூறினார்.
அண்மையில் மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் Suu Kyiஐ வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்ததும், அவர் அரசியலில் மீண்டும் ஈடுபட உத்திரவு அளித்ததும் நாட்டிற்கு நல்ல அடையாளங்கள் என்று கூறிய Yangon பேராயர் சார்ல்ஸ் போ, தற்போது Suu Kyiயும் பிற அரசியல் கட்சிகளும் இணைந்து மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் நேரம் வந்துள்ளது என்று கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட Suu Kyi விருப்பம் தெரிவித்துள்ளதை வரவேற்றுப் பேசிய பேராயர் போ, அவர் எவ்வளவு தூரம் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.
நாட்டிற்கு இது ஒரு முக்கிய நேரம் என்று உணர்ந்துள்ள Suu Kyi வரவிருக்கும் தேர்தலில் நல்ல முடிவுகள் வெளியாக வேண்டும் என்பதற்காக தலத்திருச்சபையின் செபங்களைக் கோரியுள்ளார் என்றும் பேராயர் போ தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.