2011-11-22 15:07:25

நேபாளக் காரித்தாஸ் வளர்ச்சித்திட்டப் பணியாளருக்குப் பயிற்சி


நவ.22,2011. நேபாளக் கத்தோலிக்கத் திருச்சபையின் காரித்தாஸ் அமைப்பு அந்நாட்டின் வளர்ச்சித்திட்டப் பணியாளருக்குப் பயிற்சியளித்து வருகிறது.
நேபாளக் காரித்தாஸ் நடத்திய 10 நாள் பயிற்சிப் பாசறையில் பங்கு கொண்ட 21 பேரில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் மற்றும் புத்தமதங்களைச் சேர்ந்தவர்கள்.
கத்தோலிக்கச் சமூகப் போதனைகள், வேளாண்துறை வளர்ச்சி, தற்கொலைத் தடுப்பு நடவடிக்கை, எய்ட்ஸ் நோய்க் குறித்த விழிப்புணர்வு, கருக்கலைப்புக்கு எதிரான விவகாரங்கள் மற்றும் பிற சமூகத் தலைப்புகள் இப்பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்பட்டன.
நேபாளத்தைப் பாதிக்கும் பல சமூகப் பிரச்சனைகளைக் கையாள்வதற்கு இப்பயிற்சி உதவியதாக இதில் பங்கு கொண்டவர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.