நவ.28-டிச.2 வத்திக்கானில் பன்னாட்டு இறையியல் ஆணைக்குழு கூட்டம்
நவ.22,2011. இம்மாதம் 28 முதல் டிசம்பர் 2 வரை பன்னாட்டு இறையியல் ஆணைக்குழு வத்திக்கானில்
கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகத் திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. திருப்பீட
விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடா தலைமையில் நடைபெறும்
இக்கூட்டத்தை, அந்த ஆணையத்தின் புதிய பொதுச் செயலர் ஆயர் Charles Morerod வழி நடத்துவார்.
ஒரே கடவுள் கோட்பாடு, கிறிஸ்தவக் கோட்பாட்டுச் சூழலில் திருச்சபையின் சமூகக் கோட்பாட்டின்
முக்கியத்துவம், நவீன இறையியலில் ஆராய்ச்சிகள் ஆகிய தலைப்புகள் இக்கூட்டத்தில் கலந்து
ஆராயப்படும் என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. இந்த மூன்றாவது தலைப்பு குறித்த
குறிப்பிடத்தக்கப் பங்களிப்புக்கள் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில்
வழங்கப்பட்டுள்ளன என்றும் திருப்பீடம் அறிக்கை கூறுகிறது.