2011-11-22 15:06:43

நற்செய்திப்பணி அறிவிப்புப்பணிக்கு நவீன சமூகப் பன்வலை அமைப்புக்களின் முக்கியத்துவத்தை ஆசிய ஆயர்கள் வலியுறுத்தல்


நவ.22,2011. நற்செய்திப்பணி அறிவிப்புப்பணிக்கு நவீன சமூகப் பன்வலை அமைப்புக்களின் முக்கியத்துவத்தை அண்மையில் தாய்வானில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளனர் ஆசிய ஆயர்கள்.
இம்மாதம் 14 முதல் 19 வரை Hualienல் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியா, மியான்மார், மங்கோலியா, மலேசியா, கொரியா, சிங்கப்பூர், புருனெய், தாய்வான், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் சமூகத்தொடர்பு ஆணைக்குழுக்களின் 30க்கு மேற்பட்ட ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் கலந்து கொண்டனர்.
Facebook, Twitter, YouTube போன்ற நவீன சமூகப் பன்வலை அமைப்புக்களைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் இக் கருத்தரங்கில் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மேலும், திருச்சபைக்குள் நடக்கும் பாலியல் முறைகேடுகளைக் களைவது குறித்தும் ஆயர்கள் சிந்தித்ததாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.