2011-11-21 15:45:35

இலங்கையின் நீதித்துறை சீரமைப்பிற்கு மதத்தலைவர்கள் அழைப்பு


நவ 21, 2011. ஏற்கனவே 30 மாத தண்டனையை அனுபவித்து வரும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு தற்போது முன்றாண்டு சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் நோக்குடையது எனக் குற்றஞ்சாட்டும் அந்நாட்டு மதத்தலைவர்கள், நீதித்துறையில் சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உள்நாட்டுப்போர் காலத்தின் உச்சக்கட்டத்தில் சரணடைய முன்வந்த தமிழ்ப் போராளிகளை சுட்டுக் கொல்லும்படி இராணுவ அமைச்சர் கொத்தபயா இராஜபக்சே கட்டளையிட்டார் என சரத் பொன்சேகா ஒரு பேட்டியில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பொய்யான தகவலை வழங்கியதாக அவர் அரசால் குற்றஞ்சாட்டப்பட்டடார்.
தற்போது பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைத் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட புத்தமத குரு Maduluwawe Sobitha Thero, நீதித்துறை தனிச்சுதந்திரத்துடன் செயல்பட மக்கள் அழைப்பு விடுக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
இலங்கையின் நீதித்துறை சீரமைப்பிற்கு மதத்தலைவர்களுடன் இணைந்து பத்த்கிரிகையாளைர்களும் வழக்குரைஞர்களும் தங்கள் விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.