2011-11-19 15:07:21

அன்னைமரியா வழியாக இயேசுவைத் தேடுமாறு திருத்தந்தை அழைப்பு


தனிப்பட்டவர்கள் மற்றும் நாடுகளின் மீட்பு வரலாற்றில், இறை இரக்கம், நம் பாவங்களை மன்னிப்பதோடு, உண்மையும் ஒளியும் நிறைந்த பாதையில் நம்மை வழி நடத்துகிறது. ஏனெனில் நாம் தொலைந்து போவதை கடவுள் விரும்பவில்லை. சிலவேளைகளில் இப்பாதையில் வேதனையும் உண்டு. இறை இரக்கத்தின் இந்தப் பண்பானது ஒவ்வொரு கிறிஸ்தவரின் திருமுழுக்கின் போது கடவுள் செய்து கொண்ட உடன்படிக்கையில் அவர் எவ்வளவு பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றது. அன்னை மரியா இறை இரக்கப் பேருண்மையை மிக அதிகமாக அனுபவித்தவர். அவர் இறையழைப்பிற்குச் சொன்ன ஆகட்டும் என்ற பதில் வழியாக, மனித சமுதாயத்தில் இறையன்பு வெளிப்படுத்தப்பட அவர் உதவியிருக்கிறார். இவ்வன்னை, தனது எளிமை மற்றும் தாய்க்குரிய இதயத்தோடு ஒரே ஒளியும் உண்மையுமான தமது மகன் இயேசுவை நமக்குக் காட்டுகிறார். எனவே பயப்படாமல் நம்பிக்கையுடன் அவரின் பரிந்துரையை வேண்டுவோம் என்று சொல்லி அன்னை மரியிடம் ஆப்ரிக்க மக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை.
இரக்கமுள்ள தாயே, நம்பிக்கையின் அரசியே, அமைதியின் அரசியே, ஆப்ரிக்க அன்னையே, ஆப்ரிக்க இளையோரின் ஏக்கங்களை நிறைவேற்றும். நீதி, அமைதி மற்றும் ஒப்புரவுக்காக ஏங்கும் இதயங்களை நம்பிக்கையால் நிரப்பும். நோயாளிகள் குணம் பெறவும், துன்புறுவோர் ஆறுதலடையவும் பாவிகள் மன்னிப்பு அடையவும் உம் மகனின் அருளைப் பெற்றுத் தாரும். மனித சமுதாயத்துக்கு மீட்பையும் அமைதியையும் பெற்றுத்தாரும் தாயே, ஆமென்.








All the contents on this site are copyrighted ©.