காடுகள் அழிப்பு, புவியின் பொருளாதாரம் மற்றும் சமூகங்களுக்கு அச்சுறுத்தல் - பான் கி
மூன்
நவ.18,2011. காடுகள் அழிக்கப்பட்டு வருவது, இப்புவியின் வெப்பநிலை மாற்றத்திற்கும் பொருளாதார
வளர்ச்சிக்கும் மட்டும் அச்சுறுத்தலாக இல்லை, அத்துடன் காடுகளை நம்பி வாழும் சமூகங்களின்
வருவாய், வாழும்நிலை மற்றும் கலாச்சாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று ஐ.நா.பொதுச்
செயலர் பான் கி மூன் கூறினார். இந்தோனேசியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பான்
கி மூன், அந்நாட்டின் Borneo மாநிலத்தின் மத்திய Kalimantan பகுதியைப் பார்வையிட்ட போது
இவ்வாறு கூறினார். காடுகள் அழிப்பால் ஏற்படும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு
மிகப்பெரும் திட்டத்தை இந்த Kalimantan பகுதியில் நடத்தி வருகிறது இந்தோனேசிய அரசு. இத்திட்டத்தின்
மூலம், காடுகள் சேமித்து வைக்கும் கார்பனின் மதிப்பை அறிவிக்கவும் இந்தோனேசிய அரசு முயற்சி்தது
வருகிறது. உலக அளவில் வெளியேற்றப்படும் கார்பனில் சுமார் 17 விழுக்காட்டிற்குக் காடுகள்
அழிக்கப்படுவதே காரணம் என்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.