3 மாதங்களில் இந்திய வேலைவாய்ப்பு 2.15 லட்சமாக அதிகரிப்பு: ஆய்வு
நவ.17,2011. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் இந்திய நாட்டின் வேலைவாய்ப்பு 2.15
இலட்சம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இவற்றில் தகவல்
தொழில் நுட்பத் துறைகளில் 1.64 லட்சம் வேலைவாய்ப்புக்களும், உலோகத்துறையில் 0.53 லட்சம்
பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதே போன்று வாகன உற்பத்தித்
துறையில் 0.18 இலட்சம், கற்கள் மற்றும் நகை தயாரிப்பு தொழிலில் 0.13 இலட்சம் ஏற்றுமதி
துறையில் 0.67 இலட்சம், ஏற்றுமதி அல்லாத துறைகளில் 1.48 இலட்சம் என வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே,
பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம், இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது என்றும்,
கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர், வேலையில்லாத் திண்டாட்டப்
பட்டியலில் சேர்ந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. ஒட்டு மொத்தமாக, பிரிட்டனில்
வேலையின்மை 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதத்தோடு முடிந்த
மூன்றாவது காலாண்டில், வேலையில்லாத் திண்டாட்டம், 26 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 19 ஆண்டுகளைப் பார்க்கும் போது மிக அதிகம் என்று ஊடகங்கள் கூறுகின்றன.