2011-11-14 15:43:00

உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு செபிக்கும் நாளையொட்டி சிறப்பு செபங்கள்


நவ.14,2011. கிறிஸ்துவை விசுவசிப்பதற்காக, உலகின் பல நாடுகளில் துன்புறுத்தப்படும் மக்களுக்காக கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் சிறப்பு செபங்கள் எழுப்பப்பட்டன.
நவம்பர் 12, கடந்த சனிக்கிழமை உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு செபிக்கும் நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளும் இணைந்து சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் இந்தியாவின் பல பகுதிகளில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்குச் சிறப்பாகச் செபிக்கும்படி அழைப்பு விடுத்திருந்தன.
"Global Council of Indian Christians" (GCIC) என்று அழைக்கப்படும் இந்திய கிறிஸ்தவர்களின் உலகக்கழகம், FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள குறிப்புக்களின்படி, 2006ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1556 இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடுமையான வன்முறைகள் வெளியாகியுள்ளன என்றும், 2008ம் ஆண்டு மட்டும் 100 கிறிஸ்தவத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.







All the contents on this site are copyrighted ©.