கஜகஸ்தான் சிறைகளில் மசூதிகளும், கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டுள்ளன
நவ.12,2011. கஜகஸ்தான் நாட்டுச் சிறைகளிலுள்ள மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பிற
வழிபாட்டுத் தலங்களை அந்நாட்டு அரசு மூடியுள்ளது. அந்நாட்டின் புதிய சட்டப்படி,
பொதுக் கட்டிடங்களில் சமய நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று சொல்லி அதிகாரிகள்
தங்களது இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது. இது
குறித்துப் பேசிய கஜகஸ்தான் உள்துறை அமைச்சர் Alika Kadenova, கிறிஸ்தவ ஆலயங்களும் மற்றும்
பிற கட்டிடங்களும் சட்டத்துக்குப் புறம்பே கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.