2011-11-12 15:03:54

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கும் விலங்குகளுக்கும் அச்சுறுத்தல்


நவ.12,2011. இலங்கை அரசின் நில அபகரிப்புகளும் காடுகள் அழிப்பும் மக்களின் நல்வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று NARL என்ற தேசிய நிலஉரிமை கூட்டமைப்பு கூறியது.
இலங்கை அரசின் சுற்றுலாத் திட்டங்களின்கீழ் இடம்பெறும் நில அபகரிப்பு, காடுகள் அழிப்பு, வீடுகள் இடிப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட NARL அமைப்பு, இவற்றுக்கு எதிராய் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு கேட்டுள்ளது.
ஆசியாவின் அற்புதம் என்ற திட்டத்தின்கீழ் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மகிந்த இராஜபக்ஷ அரசு பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமூகத்தில் நலிந்தவர்களின் தேவைகளை இத்திட்டங்கள் புறக்கணிக்கின்றன என்று ஊடகச் செய்தி ஒன்று குறை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.