2011-11-12 15:01:32

இந்தோனேசியாவின் பாப்புவாவில் வன்முறை நிறுத்தப்பட ஆயர்கள் அழைப்பு


நவ.12,2011. பெரும்பாலும் பெண்களையும் சிறாரையும் பாதிக்கும் வன்முறையை நிறுத்தி, ஒப்புரவுக்கு வழி அமைக்கும் உரையாடலை உடனடியாகத் தொடங்குமாறு இந்தோனேசிய ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தோனேசியாவின் Irian Jaya மாநிலத்தில் அப்பாவி மக்கள் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள் என்று குற்றம் சாட்டி இராணுவம் அவர்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வைத்து ஆயர்கள் இந்த அழைப்பை முன்வைத்துள்ளனர்.
அம்மாநிலத்தின் உள்நாட்டு விவகாரங்களைத் தீர்ப்பதற்கு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவது கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஆயர்கள், உரையாடலை மேற்கொண்டு அமைதியைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்குமாறு கேட்டுள்ளனர்.
பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் இதேமாதிரியான வேண்டுகோள்களை அரசுக்கு முன்வைத்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.