2011-11-09 14:42:22

மரபணுக்கள் தொடர்பான கருத்தரங்கு வத்திக்கானில் நடைபெறுகிறது


நவ.09,2011. முழு வளர்ச்சி அடைந்த தண்டுவடத்தின் மரபணுக்களை மையப்படுத்திய ஒரு கருத்தரங்கு வத்திக்கானில் இப்புதனன்று ஆரம்பமானது.
பாப்பிறை கலாச்சாரக் கழகமும், வாழ்வின் அடிப்படையாக தண்டுவடம் என்ற பொருள்படும் Stem for Life Foundation என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் வாதிகள் மற்றும் மதப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட 350 பேர் கலந்து கொள்கின்றனர்.
பாப்பிறை கலாச்சாரக் கழகத்தின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi இக்கருத்தரங்கைக் குறித்த விவரங்களை இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.
உயிர்களைக் காப்போம் என்று மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளை உயிரியல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் எடுப்பதா என்பது குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று பாப்பிறைக் கழகத்தின் அறிவியல் துறைக்கு பொறுப்பாளரான அருள்தந்தை Tomasz Trafny கூறினார்.
இன்று உலகில் புற்றுநோய், நீரழிவு நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பல கோடி மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தண்டுவட அணுக்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு Stem for Life Foundation நிறுவனத்தின் தலைவர் திரு.ராபின் ஸ்மித் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.