2011-11-09 14:52:41

நைரோபியில் HIV மற்றும் AIDS நோய் கண்டுள்ள குழந்தைகளுக்கென்று இயேசு சபையினர் நடத்தும் ஒரு தனிப்பட்ட பள்ளி


நவ.09,2011. ஆப்ரிக்காவின் நைரோபியில் Kibera எனும் இடத்தில் உள்ள ஒரு சேரியில் HIV மற்றும் AIDS நோய் கண்டுள்ள குழந்தைகளுக்கென்று ஒரு தனிப்பட்ட பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.
Kiberaவில் வாழும் பத்து இலட்சம் மக்களில் 30000௦க்கும் அதிகமான குழந்தைகள் HIV நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கென்று புனித ஆலோய்சியஸ் கொன்சாகா கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி என்ற ஒரு தனிப்பட்ட நிறுவனத்தை இயேசு சபையினர் நடத்தி வருகின்றனர்.
கென்யாவில் ஆரம்பக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது என்றும், உயர்நிலைக் கல்வி பயில அதிக செலவாகிறதென்றும் உணர்ந்த இயேசு சபை குரு அருள்தந்தை Terry Charlton இப்பள்ளியை நிறுவியுள்ளார் என்று இப்புதனன்று வெளியான FIDES செய்தியொன்று கூறியுள்ளது.
2004ம் ஆண்டு AIDS நோய் கண்ட 25 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 280க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர் என்று FIDES செய்தி மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.