மதத்தீவிரவாதத்தை எதிர்த்து மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய தேவை
நவ.08,2011. உலகில் மதச்சுதந்திரம் பாதுகாக்கப்பட யூதர்களும் கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து
உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் பேராயர்
திமோத்தி டோலன். அரசின் அண்மைச் செயல்பாடுகள், மதத்தையும் மனச்சான்றையும் நசுக்கும்
ஆபத்தானச் சூழலை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது குறித்தும் தெரிவித்த பேராயர், உலகின் அனைத்து
மத நம்பிக்கையாளர்களும் மதத்தீவிரவாதத்தால் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மதத்தீவிரவாதங்களின் போக்கால், பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மதங்கள் ஒன்றிணைந்து
உழைக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது எனவும் கூறினார் பேராயர் டோலன்.