2011-11-08 14:36:53

ஒப்புரவின் பாதை திறக்கும் வாய்ப்பு குறித்து கொலம்பிய ஆயர் நம்பிக்கை


நவ.08,2011. கொலம்பியாவின் கொரில்லாக்குழுத் தலைவர் அல்ஃபோன்சோ கானோ இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை உவகை அடையவில்லை, ஆனால் இந்த மரணம் மூலம் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்புரவிற்கான பாதை திறக்கும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ளதாக கொலம்பிய தலத்திருச்சபை அறிவித்துள்ளது.
வன்முறை எப்போதும் வன்முறையையேக் கொணரும் என்பது உண்மையென்ற நிலையில், தனியாரின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஒழுங்கமைவு ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இம்மரணம் சிலவேளைகளில் நியாயப்படுத்தப்பட்டாலும், பேச்சுவார்த்தையே அமைதிக்கான வழி என்பதை திருச்சபை எப்போதும் வலியுறுத்த விரும்புகிறது என்று கொலம்பிய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் ஆயர் Juan Vicente Cordoba Villota கூறினார்.
அமைதி முயற்சிகளில் நடுநிலையாளராக இருந்து செயல்பட தலத்திருச்சபை தயாராக இருப்பதாகவும் எடுத்துரைத்தார் ஆயர் Villota.








All the contents on this site are copyrighted ©.