2011-11-08 14:39:29

இலங்கையில் போர் முடிந்தும் சித்ரவதைகள் முடியவில்லை - அலைவரிசை 4


நவ.08,2011. போர் முடிவடைந்து 2 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக இங்கிலாந்தின் அலைவரிசை 4 தொலைக்காட்சி தெரிவித்து, ஆதாரமாக, வீடியோப் பதிவுகளையும் வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கைச் சிறையில் இருந்து தப்பி பின்னர் இங்கிலாந்து வந்து அங்கு அகதிகளாகத் தங்களை ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பித்துள்ள இருவரது வாக்குமூலங்களை அது தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் இளைஞர்களைக் கட்டிவைத்து முதுகில் பலமாக அடித்து சித்திரவதைப்படுத்தியுள்ளனர் இலங்கை இராணுவத்தினர்.
போர் குற்றம் மற்றும் இன அழிப்பு என்பன ஒரு புறம் இருக்க, தற்போது தமிழ் இளைஞர்களை அளவுக்கதிகமாக சித்திரவதை செய்யும் குற்றச்செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது என அலைவரிசை 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.