பாகிஸ்தான் நாட்டில் பாலர்கள் கடத்தப்படுவது குறித்து தலத்திருச்சபை கவலை
நவ.07,2011. பாகிஸ்தான் நாட்டில் பாலர்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது குறித்து தன்
ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது தலத்திருச்சபை. அண்மையில் ஆலய பீடச்சிறுவன் ஒருவன்
கடத்தப்பட்டு தப்பி வந்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட லாகூர் மறை மாவட்ட முதன்மை குரு ஆண்ட்ரூ
நிசாரி, குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல், அவர்களை முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கின்றது
அல்லது விற்கின்றது என்ற கவலையை வெளியிட்டார்.பாகிஸ்தானில் குழந்தைகள் கடத்தப்படுவது
என்பது கிறிஸ்தவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனையல்ல, மாறாக இஸ்லாமியக் குடும்பங்களையும்
பாதிக்கிறது என்று கூறிய அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பின் தேசிய ஒருங்கமைப்பாளர் அமீர்
இர்ஃபான், குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராக, கடுமையானச் சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும்
என அரசுக்கு அழைப்பு விடுத்தார்.