திறம்படச் சேவையாற்றும் கிறிஸ்தவர்களைக் கவுரவிப்பதற்கு ஆந்திர மாநில அரசு இசைவு
நவ.05,2011. சமூகநலப்பணி, மருத்துவம், கல்வி, இலக்கியம், மேடை நாடகம், நுண்கலைகள் போன்ற
சமயம் அல்லாத துறைகளில் திறமையுடன் சேவையாற்றியுள்ள கிறிஸ்தவர்களைக் கவுரவிப்பதற்கு ஆந்திர
மாநில அரசு இசைவு தெரிவித்துள்ளது. க்ததோலிக்க ஆயர்கள், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்
ஆகியோரை உள்ளடக்கிய ஆந்திர மாநில கிறிஸ்தவ நிதி கூட்டமைப்பு (APSCMFC), ஆந்திர அரசுக்கு
முன்வைத்த பரிந்துரையை ஏற்று, சமூகத்தில் பல துறைகளில் திறம்படச் சேவையாற்றும் கிறிஸ்தவர்களைக்
கவுரவிப்பதற்கு அது முன்வந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் திறமையாகப் பணியாற்றும்
5 பேர் வருகிற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அரசால் கவுரவிக்கப்படுவார்கள்.
இவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.