அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நவம்பர் 05,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் மக்களில் பதினைந்து பேரில் ஒருவர்
ஏழையாக உள்ளதாக அண்மைக் கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 2010-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பில், ஆண்டு ஒன்றிற்கு நான்கு பேர் உள்ள குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 11
ஆயிரத்து 157 டாலராகவும், தனிநபரின் ஆண்டு வருமானம் ஐந்தாயிரத்து 570 டாலருக்குக் கீழே
உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சுமார்
2 கோடியே 5 இலட்சம் அமெரிக்கர்கள் அதாவது அந்நாட்டு மக்கள் தொகையில் 6.7 விழுக்காட்டினர்
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், 50 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்ட கொலம்பியா
மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.