2011-10-31 15:07:16

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை


அக்.31,2011. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 15 பேர் தற்கொலை செய்து கொள்வதில், சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக ஆண்களும்; உணர்வுப்பூர்வமான மற்றும் சொந்தப் பிரச்னைகளால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தற்கொலை செய்து கொள்வோரில் 26 விழுக்காட்டினர் நன்கு படித்தவர்கள்; 19.8 விழுக்காட்டினர் படிக்காதவர்கள் எனவும், திருமணமான நபர்களில், பெண்களை விட, ஆண்கள் தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் இநத ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டதில், அதிக எண்ணிக்கையுடன், அதாவது 12.3 விழுக்காட்டுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.