2010ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 11 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்
அக்.31,2011. கடந்த 2010ம் ஆண்டில், 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டனர், 5,484
குழந்தைகள் கற்பழிக்கப்பட்டனர், 1,408 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்' என, மத்திய
அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், நாடு முழுவதும் நடந்த கொடூரமான
குற்றங்களில், 33 ஆயிரத்து 908 பேர் கொல்லப்பட்டனர். இதில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட
இளைஞர்கள் 15 ஆயிரத்து 787 பேர்; 1,408 பேர் அப்பாவி குழந்தைகள் என, அரசு வெளியிட்டுள்ள
புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்,
கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டனர். குழந்தைகள் கடத்தலில், தலைநகர்
டில்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு, 2,982 குழந்தைகள் கடத்தப்பட்டனர். இதற்கு அடுத்ததாக,
பீகாரில் 1,359, உ.பி.,யில் 1,225, மகாராஷ்டிராவில் 749, ராஜஸ்தானில் 706, ஆந்திராவில்
581 குழந்தைகளும் கடத்தப்பட்டனர். இவ்வாறு, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.