அக் 29, 2011. விவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளதாக
தேசிய குற்றவியல் புள்ளிவிவர அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த
1995 -ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான 16 ஆண்டு கால கட்டத்தில் சுமார் 2லட்சத்து
50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், முதல் எட்டு ஆண்டு கால
இடைவெளியில் இத் தற்கொலைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 66 ஆக இருந்தது அடுத்த எட்டு ஆண்டுகளில்
30 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிய வருகிறது. விவசாயிகள் தற்கொலை
செய்யும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், அதனையடுத்து ஆந்திரா,
கர்நாடகா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களும் இடம்பெறுகி்ன்றன. மகாராஷ்டிரா
மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை
ஏறத்தாழ 1,155 ஆக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.