2011-10-29 16:36:54

பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்


அக் 29, 2011. பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அதே மறைமாவட்ட குரு செபஸ்தியான் டுடுவை அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தலைநகர் டாக்காவின் தூய ஆவி உயர் குருமடத்தின் துணை அதிபராகப் பணியாற்றி வரும் குரு டுடு 1967ம் ஆண்டு சங்குரா எனுமிடத்தில் பிறந்தவர். இதே குருமடத்தில் பயின்று 1999ம் ஆண்டின் இறுதியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், இரு பங்குதளங்களில் பணிபுரிந்துள்ளதுடன் உரோம் நகரின் உர்பான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தினாஜ்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள குரு செபஸ்தியான் டுடு, 2009ம் ஆண்டு முதல் டாக்கா தூய ஆவி உயர் குருமடத்தின் துணை அதிபராகப் பணியாற்றி வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.