2011-10-29 16:35:55

செயற்கை இரத்தம் தயாரித்து இங்கிலாந்து அறிவியலாளர்கள் சாதனை


அக் 29, 2011. அவசரத் தேவையின் போது உடனடியாக இரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதைத் தடுக்க, தற்போது இங்கிலாந்து அறிவியலாளர்கள் செயற்கை முறையில் இரத்தம் தயாரித்துள்ளனர்.
இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கி, அதை ஆய்வுக் கூடத்தில் வைத்து செயற்கை இரத்தத்தை உருவாக்கியுள்ளனர்.
மனித உடலில் செலுத்தும்போது, எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாத இந்த இரத்தம் இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய அறுவைச் சிகிச்சை, இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்துவதன் மூலம் இலட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.