2011-10-28 14:51:41

அசிசி உலக அமைதி நாள் நிகழ்வையொட்டி, மனிலாவில் பல்சமயக் கூட்டம்


அக்.28,2011. அசிசி நகரில் இவ்வியாழன் நடைபெற்ற உலக அமைதி நாள் நிகழ்வையொட்டி, மனிலா நகரில் பல்சமயக் கூட்டம் ஒன்றை பிலிப்பின்ஸ் தலத்திருச்சபை ஏற்பாடு செய்திருந்தது.
பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகளும், பிலிப்பின்ஸ் பழங்குடியினர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அசிசி நகரில் திருத்தந்தை விடுத்த செய்தியின் சுருக்கத்தை மனிலாவின் துணை ஆயர் Bernardino Cortez எடுத்துரைத்தார்.
பல்வேறு தலைவர்கள் பேசியபின்னர், அருளாளர் இரண்டாம் ஜான்பால் தலைமையில் அசிசி நகரில் மேற்கொள்ளப்பட்ட பல்சமயத் திருப்பயண விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பிரதிநிதிகள் சமாதானத்தின் அடையாளமாக, மலர்களைப் பகிர்ந்து கொண்டனர் என்றும், இறுதியில் அனைவரும் ஒரு சமாதான உறுதிமொழியில் கையொப்பம் இட்டனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.