அக் 29, 2011. வாழ்ந்தவர் வழியில் .... லா. ச. இராமாமிர்தம்
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. இராமாமிர்தம், 1916ம் ஆண்டு லால்குடியில் பிறந்த தமிழ்
எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்
உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். தந்தை மற்றும் ஊர் பெயர்களை இணைத்து,
லா. ச. இராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். இலக்கிய உலகில்
லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்த அவரை,
அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு
1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" வழங்கப்பட்டது. லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய
மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம்
பெற்றிருக்கின்றன. அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைச் சிறந்ததெனக் கூறுவார்கள். அவருடைய
"புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனிச் சிறப்புடன் விளங்குகின்றன. லா.ச.ரா
அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91வது வயதில், சென்னையில் மரணமடைந்தார்.