2011-10-25 15:59:51

வத்திக்கான் தோட்டத்தில் 400 ஆண்டு பழமையுடைய இஸ்ரயேல் ஒலிவ மரம்


அக்.25,2011. இஸ்ரயேலுக்கும் வத்திக்கானுக்கும் இடையே விளங்கும் நட்புறவின் அடையாளமாக 400 ஆண்டுகள் பழமையுடைய ஒலிவ மரம் ஒன்றை இப்புதனன்று வத்திக்கான் தோட்டத்திற்கென வழங்குகிறது இஸ்ரயேல் அரசு.
இஸ்ரயேல் பிரதமர் பெஞ்சமின் நெத்னயாகு கடைசியாக திருப்பீடம் வந்தபோது, இவ்வளவு பழமையான ஓர் ஒலிவ மரத்தை வத்திக்கானுக்கு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அம்மரத்தை வத்திக்கானுக்கு கொண்டு வர உதவியுள்ளது Keren Kayemeth LeIsrael என்ற யூத அமைப்பு.
4மீட்டர் உயரமுடைய இந்த ஒலிவ மரம், கிறிஸ்தவர்களின் புனித இடமான நாசரேத் மலைக்குன்றில் வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதனன்று காலை வத்திக்கான் தோட்டத்தில் இடம்பெற உள்ள இம்மரம் நடும் விழாவில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயுடன் திருப்பீட அதிகாரிகளும், யூத மதப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.