2011-10-24 16:12:32

பாகிஸ்தானில் மறைபரப்பு ஞாயிறன்று விவிலியத்தின் புதியதொரு பதிப்பு வெளியிடப்பட்டது


அக்.24,2011. உருது மொழியில் விவிலியத்தின் புதியதொரு பதிப்பு மறைபரப்பு ஞாயிறென திருச்சபையில் கொண்டாடப்பட்ட இஞ்ஞாயிறன்று பாகிஸ்தானில் வெளியிடப்பட்டது.
உருது மொழியில் பத்தாவது பதிப்பாக வெளியாகும் இந்த விவிலியத்தை பாகிஸ்தானில் பணிபுரியும் ஏழு ஆயர்களும், இன்னும் ஆயிரக்கணக்கான குருக்களும் பல்வேறு ஆலயங்களில் வெளியிட்டனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
விவிலியத்தின் இந்தப் புதிய பதிப்பு நான்கு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல் முறை என்று பாகிஸ்தான் கத்தோலிக்க விவிலியக் கழகத்தின் இயக்குனர் அருள்தந்தை எம்மானுவேல் அசி கூறினார்.
2005ம் ஆண்டு விவிலியப் பதிப்புக்கள் வெளியானபோது, 50,000 பிரதிகள் வெளியாயின என்றும், இம்முறை 70,000 பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் UCAN செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
வருகிற ஆண்டு அந்நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் மரியம்மாபாத் என்ற இடத்தில் திட்டமிடப்பட்டு வரும் விவிலிய மாரத்தான் என்ற நிகழ்வில், தொடர்ந்து விவிலிய உரைகள் ஒரு வாரம் இடைவிடாமல் நடைபெறும் என்றும், அதற்காக பாகிஸ்தான் கத்தோலிக்க விவிலியக் கழகம் ‘ஒரு இலட்சம் விவிலிய நண்பர்கள்’ என்ற குழுவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் இக்கழகம் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.