13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தலைவர், சிறப்புச் செயலர் நியமனம்
அக்.22,2011. 2012ம் ஆண்டு அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 13வது
உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு இரண்டு பொறுப்பாளர்களை இச்சனிக்கிழமை நியமித்தார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். இம்மாமன்றத்தின் தலைவராக, அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டன் பேராயர்
கர்தினால் Donald William WUERL என்பவரையும், சிறப்புச் செயலராக பிரான்சின் Montpellier
பேராயர் Pierre Marie CARRÉ என்பவரையும் நியமித்தார். "கிறிஸ்தவ விசுவாசத்தை அறிவிப்பதற்குப்
புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி" என்ற தலைப்பில் 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும்