2011-10-21 15:59:41

நேபாளத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது


அக்.21,2011. SIGNIS என்ற திருச்சபையின் உலகளாவிய சமூகத் தொடர்பு அமைப்பில், பெரும்பான்மையான இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு முதன்முறையாக இணைந்துள்ளது.
SIGNIS அமைப்பு, காட்மண்டுவில் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் அதன் உறுப்பினராக இவ்வியாழனன்று இணைந்தது நேபாளம்.
19 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நேபாளத்திலிருந்து ஆறு பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பேசிய Chirendra Satyal, நேபாளத்தில் கிறிஸ்தவ சமூகத் தொடர்பு பற்றிப் பேசும் போது அது கத்தோலிக்கம் சாராத ஊடகச் செய்திகள் என்றே பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது என்று கூறினார்.
இந்துக்களைக் பெரும்பான்மையாகக் கொண்ட நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் சுமார் நான்கு விழுக்காட்டினர். இவர்களில் கத்தோலிக்கர் சுமார் 9,000 பேர் மட்டுமே.
மேலும், நேபாள நாடாளுமன்றத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், அந்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை நான்காயிரம் அதிகரித்துள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.