2011-10-21 15:59:54

நற்செய்தியை அறிவிக்க வியட்நாம் கத்தோலிக்கருக்கு அழைப்பு


அக்.21,2011. வியட்நாமில் கத்தோலிக்கரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உதவியாக அந்நாட்டுக் கத்தோலிக்கர் நற்செய்தியை அதிகமாகப் பரப்ப முன்வர வேண்டுமென்று தலத்திருச்சபைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஹூயு உயர்மறைமாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சுமார் ஆயிரம் குருக்கள், துறவிகள் மற்றும் பொது நிலையினருக்கு உரையாற்றிய ஹூயு துணை ஆயர் பிரான்சிஸ் சேவியர் லெ வான் ஹாங் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
வியட்நாமின் ஏறக்குறைய 8 கோடியே 60 இலட்சம் பேரில் 7 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்பதையும் ஆயர் ஹாங் சுட்டிக் காட்டினார்.
வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 85வது உலக மறைபரப்பு ஞாயிறையொட்டி இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.