2011-10-20 14:17:09

ஆஸ்திரேலிய ஆயர்களுக்கான திருத்தந்தையின் செய்தி


அக் 20, 2011. ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் நல்விளைவுகள் குறித்து அந்நாட்டு ஆயர்களின் அறிக்கையிலிருந்து அறிய வந்து மகிழ்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆஸ்திரேலிய ஆயர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களிடம், அந்நாட்டில் இடம்பெற்ற உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களும், கடந்த ஆண்டில் திருச்சிலுவையின் மரிய MacKillop புனிதராகஅறிவிக்கப்பட்டதும் அத்தலத்திருச்சபையின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் எனக் குறிப்பிட்டார்.
அப்புனிதையின் வாழ்வு இக்காலக் குழந்தைகளுக்கான பெற்றோரின் கடமையில் துணைபுரியட்டும் என உரைத்த திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பதில் பல்வேறு தடைகளை எதிர்நோக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இப்புனிதையின் உறுதிப்பாடான நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுக்களாகஇருக்கட்டும் எனக் கூறினார்.
அனைவருக்கும் நல்லதொரு வாழ்வைக் கட்டியெழுப்ப உதவும் நோக்கில் தன் கடந்த காலத் தவறுகளை திறந்த மனதுடனும் நேர்மையுடனும் ஏற்றுக்கொள்ளத் தலத்திருச்சபை முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.