அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அடக்கு முறை அரசுகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வந்துள்ளனர்
- Amnesty International
அக்.19,2011. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மத்திய கிழக்குப் பகுதி நாடுகளிலும்,
வடக்கு ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ள அடக்கு முறை அரசுகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வந்துள்ளனர்
என்ற அதிர்ச்சித் தகவலை Amnesty International என்ற உலக அமைப்பு இச்செவ்வாயன்று வெளியிட்டது. பக்ரைன்,
எகிப்து, லிபியா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு 2005ம் ஆண்டு முதல் ஆயுதங்களை வழங்கி
வந்துள்ள நாடுகள் என இவ்வறிக்கை சுட்டிக் காட்டும் 11 நாடுகளில் ஆஸ்திரியா, பெல்ஜியம்,
பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, இரஷ்யா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகள் அடங்கும். எகிப்து,
லிபியா, ஏமன் ஆகிய நாடுகளில் உருவான புரட்சிகள் மிகவும் கொடூரமாக அடக்கப்பட்டதற்கு இந்நாடுகள்
விற்பனை செய்த ஆயுதங்களே காரணம் என்றும் இவ்வுலக அமைதி நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்
காட்டுகிறது. இத்தகைய இராணுவத் தளவாடங்களின் விற்பனை ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகி வரும்
வரையில், உலகில் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவது பெரும் கேள்விக் குறியாகவே இருக்கும்
என்று இவ்வறிக்கையைத் தயாரித்த தலைமை ஆய்வாளர் Helen Hughes இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம்
கூறினார்.